Monday, March 28, 2016

தொழிலுக்கு அப்பால்....


யார் பெத்த பிள்ளையோ? 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்தச் சிறு பெண்குழந்தை தன் குடும்பத்தையே காவு கொடுத்து விட்டாள். அவளுக்கு அது தெரிந்திருக்கக் கூடுமோ என்னமோ? அவளுக்குமே தலையிலே காயம். வைத்திய சாலையில் தான் இருக்கிறாள். சுகமான பின் எங்கு போவாளோ?  அவள் வாழ்வு எப்படி எல்லாம் இனித் திசை மாறிப் போகுமோ? சிணுக்கமும் வலியில் துவளுவதும் மன வாட்டமுடனும் கிடக்கும் அவள் இந்த உயர் பட்டம் வகிக்கும் இந்த இராணுவ அதிகாரி வந்தாலன்றி யார் வந்தாலும் சமாதானம் ஆகுவதில்லையாம். சில வேளை அவர் தான் காப்பாற்றிக் கொண்டுவந்திருக்கக் கூடுமோ?  கடந்த நான்கு இரவுகளாக இந்த அதிகாரி அவள் கூடவே இருந்து அவளை அமைதி கொள்ளச் செய்கிறாராம்.

நெஞ்சினில் ஈரம்.......

பார்த்த போது மனதை நெகிழ வைத்தது.

அனுப்பி வைத்திருந்தவர்: பரா.சுந்தா. (நன்றி)

No comments:

Post a Comment