Wednesday, September 1, 2010

வசந்த காலம்


இன்று இங்கு வசந்த காலத்தின் முதல் நாள்.
செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி.
மழையில் குளித்து முகிலில் முகம் துடைத்துச் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க,
மெல்லியதாய் ஒரு குளிர்தென்றல் நாட்டைச் சற்றே தழுவிச் செல்ல,
மரங்கள் குருத்து விட மலர்கள் மெல்ல மொட்டவிழ,
பறவைகள் தத்தம் கீதங்களை இசைத்த படி முட்டை போட இடம் தேட,
இயற்கை இன்று சட்டை மாற்றுகின்றது.
இனி,நாடு இருட் குளிர் போர்வைக்குள் இருந்து மெல்ல மெல்ல சோம்பல் முறித்து எழும்.
பொன் கூந்தல் அலைந்தாட சிறுமிகள் பூப்போட்ட சட்டையும் புன்னகையுமாய் புதினம் பார்த்துச் செல்வர்.
கடைகளில் கனக்க மலிவு விற்பனை.
வீடுகள் கேட்டின் மாற்றும்.
நேரம் ஒரு மணி தள்ளிப் போகும்.
மகரந்தங்கள் காற்றோடு கலந்து பலரை தும்மப் பண்ணும். சிவந்த முகங்கள் தும்மி தும்மி மேலும் சிவக்கும்
ஆனாலும் வசந்த காலம் வரவே செய்யும்.
குளிர் காலம் எப்படி வந்ததோ அதே மாதிரி.

ஒரு வாழ்க்கை அதுவாக எப்படி இருக்குமோ
அது மாதிரி!

No comments:

Post a Comment