Thursday, July 8, 2010

அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011

சில தினங்களுக்கு முன் மின் தபாலில் திரு ஜீவகுமாரன் அவர்களிடம் இருந்து வந்த செய்தியை ஒரு தகவல் கருதி உங்களோடு அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.



சிறுகதைத் தொகுப்பு
ஆயிரம் புத்தக இலவசத் திட்டம்
அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011



அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கும்,


தை2011ல் இலங்கையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் 'வாசித்தலை பரம்பலடையச் செய்தல்'என்ற விடயத்தை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் இலங்கையில் 10,11ம் வகுப்பில் தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளுக்கும், தமிழ் புத்தகங்களை வாசிக்கும் - இரவல் கொடுக்கும் பகுதியாகக் கொண்ட நூலகங்களுக்கும் 1000 நூல்களை இலவசமாகக் கொடுக்கும் திட்டம் பற்றி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுடன் தீவிரமாக ஆலோசனைகள் செய்து அதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளேன்.

இது முழுக்க முழுக்க புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் பொருளாதாரப் பங்களிப்புகளுடனும், இலங்கையில் உள்ள மற்றைய எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,புத்தக விற்பனை நிலையங்களின் ஆதரவுடனும் அனுசரனையுடனும் மேற்கொள்ளப் பட இருக்கும் முயற்சியாகும்.

இதன் முழுமையான விபரங்கள் எழுத்தாளர் விழாவில் அறியத் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் விழாக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே விழாவில் குறைந்தது 5 எழுத்தாளரின் 5000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப் பட உள்ளன.



மேலும் இந்த விழாவினை ஒட்டி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை சாதாரண தொகுப்பாக இல்லாது "புலம்பெயர் வாழ்வு" என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு அதனடிப்படையில் இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளரிடம் இருந்து சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்.

80 களில் இந்திய பாகிஸ்தான் எல்லைகளின் ஊடாக நடந்தும் பஸ்களிலும் புகையிரதங்களிலும் ஆரம்பமான இந்த ஓட்டம் பின்பு விமான மார்க்கமாகவும் கடல் மார்க்கமாயும் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது மட்டுமன்றி நடுக்கடலில் வைத்து அரசுகள் பேரம் பேசும் அவல வாழ்வாயும் பெருமளவில் பணம் புரளும் வியாபாரமாயும் மாறி விட்டது.

உயிர் பாதுகாப்பு,பொருள் தேடல் என்ற இரண்டு முகங்கள் இந்தப் புலம்பெயர் வாழ்வில் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆயினும் இந்தப் புலம்பெயர்வாழ்வில் பெற்றதை விட இழந்தவைகளே அதிகம் என்பதை ஒரு கலாச்சார ஆராய்ச்சியாளன் என்றும் மறக்க மாட்டான்.

இந்தப் புலம்பெயர் மக்களை புலத்தில் உள்ள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் புலத்தை விட்டுச் சென்ற பின்பு அவர்கள் உறவுகள் எவ்வாறு உள்ளது என்பதை இலங்கையில் உள்ள எழுத்தாளர்களும்...

புலம் பெயர்ந்த நாட்டில் உள்ள மக்களுடன் அவர்களின் அந்த நாட்டு வாழ்க்கை,சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்....

மலேசிய, சிங்கப்பூர், இந்திய எழுத்தாளர்கள் இந்த இருசாராரையும் எப்படிப் பார்க்கிறீர்கள் எனவும் எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



விதிமுறைகள் மிக இலகுவானவை;

1.இச் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

2.தட்டச்சில் அல்லது கொம்பியூட்டரில் 5 - 6 பக்கங்களுக்கு இருக்க வேண்டும்.

3.ஆக்கங்கள் word இல் (Bamini Font பாவித்து )அல்லது கையெழுத்துப் பிரதியாயின் அதை Scan செய்து pdf வடிவில் அனுப்ப வேண்டும்.

4. ஆக்கங்கள் 30.09.2010 க்கு முன்பாக அனுப்பப் பட வேண்டும்.

5. அனுப்ப வேண்டிய முகவரி jeevakumaran5@gmail.com

No comments:

Post a Comment