Tuesday, June 22, 2010

பழ விழா

கொண்டாட்டங்கள் தான் எத்தனை விதம்!எத்தனை ரகம்!!

விளையாட்டுக்கள்;ஆரவாரங்கள் என்று மகிழ்ந்திருக்கும் ஒரு கூட்டம்.

இசையில்,கலையில்,பயிலலில் லயித்திருக்கும் ஒரு கூட்டம்.

நவீன ஆடைகள்,அணிகலன்கள், விருந்துகள்,தொழில்நுட்பம்,என்று திளைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

பதவிகள்,விருதுகள்,விழாக்கள்,மக்கள்,ஆரவாரம் என ஓடித்திரியும் இன்னொரு கூட்டம்.

எழுத்து,சமூகமாற்றம்,மானுட முன்னேற்றம், என்று மகிழ்ந்திருக்கும் வேறொரு கூட்டம்.

அரசியல், உரிமை, சமத்துவம்,மக்கள் என்று தீவிரமாய் ஓடித்திரியும் இன்னொரு உலகம்.

இயற்கையில்,திறமையில்,சேவையில் கொண்டாட்டம் காணும் இன்னொரு மனிதக் குழு.

எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்.


அரசாங்கமோ எனில் தன் இராணுவ வல்லமையைக் உலகுக்குக் காட்டிப் பயமுறுத்திக் 'கொண்டாடிக்' கொண்டிருக்கிறது.

இடைக்கிடை இயற்கையும் நானும் இருக்கிறேன் என்று தன் பங்குக்கு 'கொண்டாட்டக்' குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவர்களை எல்லாம் பேசிக்கொண்டு உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது ஏதாவது செய்தாகவேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிற கூட்டத்தை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.

அவரவர் உலகில் அவரவர்.


இந்த வாரம் பதிவு போட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது வந்த மின் தபால் ஒன்று சில படங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தது.

அது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!

தக்காளிப்பழங்களால் சேறு உண்டாக்கி அதனுள் மூழ்கி எழுந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது ஸ்பெயின்.தோடம்பழங்களால் தன்னை அலங்கரிக்கிறது நெதர்லாண்ட் நாடு.தீபங்களால் வீட்டை அலங்கரித்து அதனைப் புனிதமாய் கொண்டாடுகிறது பாரத நாடு.இலங்கையோவெனில் ஒளிப்பந்தல்களால் நாட்டையே அலங்கரித்து மகிழ்கிறது.வசந்தகாலத்து முழு நிலா நாள் ஒன்றில் குழந்தைகளின் கைகளில் வண்ண காகிதங்களால் செய்யப் பட்ட விளக்குகளை கொடுத்து மின்சாரமில்லா அவ்விரவில் நிலா கேக் உண்டு மகிழ்கிறது வியட்னாம் நாடு.அலி மக்களின் அலங்காரப் பவனி சிட்னியில் பிரசித்தம்.

நத்தார் புதுவருட நாட்களில் உலகமே ஒளியிலும் பரிசுகளிலும் மகிழ்ந்திருக்கும்.

இது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!!


















அழகாய் தான் இருக்கிறது.ஆனால் சொல்ல மறந்து போன விஷயம்!
வறுமையிலும் பசியிலும் இல்லாமையிலும் இறந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.

2 comments: